Home இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்

by admin

கிழக்குப் பல்லைக்கழகத்தின் துணைவேந்தராக அப் பல்கலைக்கழகத்தின் பௌதீகவியற் துறைப் பேராசிரியர் எவ்.சீ. ராகல் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய துணைவேந்தர் ரி. ஜெயசிங்கத்தின் பதவிக் காலம் எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையிலேயே புதிய துணைவேந்தர் நியமனம் இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களிடையே நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில், பேராசிரியர் எவ்.சீ.. ராகவல் முதல் நிலையிலும், கலாநிதி எம். சந்திரகாந்தா இரண்டாம் நிலையிலும், திருமலை வளாக முதல்வர் ரி. கனகசிங்கம் மூன்றாம் நிலையிலும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
பல்கலைக்கழக சட்டத்திற்கு அமைவாக பேரவையின் பரிந்துரைகளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தராக எவ். சீ. ராகவல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 22ஆம் திகதி முதல், புதிய துணைவேந்தர் தனது கடமைகளை பெறுப்பேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More