Home இலங்கை தமிழக மீனவர்கள் விடுதலை

தமிழக மீனவர்கள் விடுதலை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


இலங்கை கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட ஆறு தமிழக மீனவர்களையும் மல்லாகம் நீதிமன்று இன்றைய தினம் விடுதலை செய்தது.

தமிழகம் புதுக்கோட்டையில் இருந்து கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி மீன் பிடிக்க வந்த நிலையில் கடற்சீற்றம் காரணமாக படகு சேதமடைந்த நிலையில் ஆறு மீனவர்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டு , மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி இருந்தனர்.

அதனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த ஆறு மீனவர்களும் இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து ஆறு மீனவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More