Home இலங்கை ரோஹித ராஜபக்ஸவின் திருமணத்தில் விசேட அதிதி ரணில்….

ரோஹித ராஜபக்ஸவின் திருமணத்தில் விசேட அதிதி ரணில்….

by admin

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ஸவின் திருமண நிகழ்வில் விசேட அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டுள்ளார்.

தனது மகனின் திருமணத்தில் கலந்துகொள்ளுமாறு தருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையிலேயே பிரதமர் இன்று திருமண நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். ரோஹித ராஜபக்ஸ அவரது நீண்ட கால காதலியான டட்யான லீ ஆகியோர் இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். மஹிந்த ராஜபக்ஸவின் குடும்ப கிராமமான வீரக்கெட்டியவில் மிகவும் எளிமையான முறையில் திருமண நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More