Home இலங்கை ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்குமிடையில் விரைவில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்குமிடையில் விரைவில் சந்திப்பு

by admin


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சபாநாயகர் கருஜயசூரியவுக்குமிடையில் விரைவில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நியமனம் தொடர்பில், ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காகவே இவ்வாறு சந்திப்பு இடம்பெறவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பரிந்துரைக்கப்பட்டவரின் பெயர், அரசமைப்பு சபையால் இரண்டாவது தடவையாகவும் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான காரணங்களைக் கண்டறிந்து தீர்வைப் பெறும் வகையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான தலைவர் வெற்றிடம் தொடர்பில், அரசமைப்பு சபை நீண்டநேரம் கலந்தாலோசித்ததன் பின்னரே ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டவரின் பெயரை அந்தச் சபை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More