Home இந்தியா மராட்டியத்தில் பன்றிக்காய்ச்சலால் ஒரு மாதத்தில் 12 பேர் உயிரிழப்பு

மராட்டியத்தில் பன்றிக்காய்ச்சலால் ஒரு மாதத்தில் 12 பேர் உயிரிழப்பு

by admin


மராட்டியத்தில் ஒரே மாதத்தில் பன்றிக்காய்ச்சல் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகின்ற நிலையில் இந்த ஆண்டின் முதல் 20 நாட்களில் புனேயை சேர்ந்த 3 பேர் உள்பட 11 பேர் இந்த காய்ச்சல் காரணமாக உயிரிழந்திருந்தனர்.

இந்த நிலையில் 48 வயது நபர் ஒருவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும் ; சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இதன் மூலம் மாநிலம் முழுவதும் ஒரே மாதத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More