Home இலங்கை குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் கோப்பாய் காவல்துறையினரால் சேகரிப்பு

குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் கோப்பாய் காவல்துறையினரால் சேகரிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை கோப்பாய் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் .

மேலும் தெரிவிக்கையில் ,

கோப்பாய் காவல்துறையினர்; வீடுகளுக்கு சென்று ஒரு படிவத்தை வழங்கி குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை சேகரித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

வடக்கில் அமைதியான நிலை காணப்படும் நிலையில் எதற்காக இவ்வாறு தகவல்களை காவல்துறையினர்; சேகரிப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோன்று கடந்த காலத்தில் வெள்ளவத்தை பகுதிகளிலும் வீடுகளில் உள்ளோரின் தகவல்களை காவல்துறையினர்; சேகரித்த போது அதற்கு அமைச்சர் மனோகனேசன் எதிர்ப்பு தெரிவித்து , காவல்துறையினர் தகவல்களை சேகரிப்பதை நிறுத்த வேண்டும் என கோரியதை அடுத்து அது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது கோப்பாய் காவல்துறையினரினால் தகவல்கள் கோரப்பட்டு வருகின்றது. தகவல்களை கோருவதற்கான காரணங்களை பொலிஸ் உயர் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். அதனூடாகவே மக்கள் மத்தியில் தற்போதுள்ள அச்ச நிலைமையை போக்க முடியும் என தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More