Home இலங்கை மன்னாரிலும் அரச வைத்தியசாலை மருந்தாளர்கள் பணி புறக்கணிப்பு – மக்கள் சிரமம்

மன்னாரிலும் அரச வைத்தியசாலை மருந்தாளர்கள் பணி புறக்கணிப்பு – மக்கள் சிரமம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள அரச வைத்திய சாலைகளில் உள்ள மருந்தாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (1) காலை முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் அரச வைத்திய சாலைகளில் உள்ள மருந்தாளர்களும் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது அரசாங்கத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மருந்தக உதவியாளர் நியமனங்களை உடனடியாக நிறுத்த கோரி மன்னார் பொது வைத்திய சாலை மற்றும் பிரதேச வைத்தியசாலை மருந்தாளர்கள் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பணிப்புறக்கணிப்பினால் இன்றைய தினம் வைத்திய பரிசோதனைக்காக வருகை தந்த நோயாளர்கள் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு தூர இடங்களில் இருந்து வந்த மக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததோடு,நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More