Home இலங்கை கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கியமைக்காக மாணவன் தாக்கப்படவில்லை – பிரதிக் காவல்துறைமா அதிபர்

கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கியமைக்காக மாணவன் தாக்கப்படவில்லை – பிரதிக் காவல்துறைமா அதிபர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கிய மாணவன் ஒருவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அச் சிறுவன் தாக்கப்பட்டத்திற்கும், கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கியமைக்கு எதுவித தொடர்புமில்லை என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரொஷான் பனான்ர்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுவன் துவிச்சக்கரவண்டியில் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் குறித்த சிறுவனது துவிச்சக்கர வண்டிக்கு முன்பாக தமது மோட்டார் சைக்கிளை திருப்பியதால் ஏற்பட்ட விபத்திலேயே இச் சிறுவன் காயமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கியமையாலேயே தாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காவல்துறையினருருக்கு கஞ்சா கடத்தல்கள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பாக பொது மக்களால் வழங்கப்படும் தகவல்கள் தொடர்பில் யாரிடமும் பகிரப்படாது எனவும் அது இரகசியமான முறையிலேயே பேணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த மாணவன் கஞ்சா தொடர்பாக தகவல் வழங்கியமையாலேயே இத் தாக்குதல் நடாத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்ததுடன் இன்றைய தினம் இதனை கண்டித்து கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More