Home இலங்கை மலையக புகையிரத சேவை வழமைக்கு திரும்பியுள்ளது

மலையக புகையிரத சேவை வழமைக்கு திரும்பியுள்ளது

by admin

நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு புகையிரத எண்ணெய்க் கொள்கலனொன்று நேற்று ( 03.02.2019 ) மாலை 5.45 மணியளவில் தடம் புரண்டதால் மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

எனினும், நேற்றிரவு 9.45 மணியளவில் புகையிரத பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையக புகையிரத சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் 26630 லீற்றர் எண்ணெய்க் கொள்கலன் ஒன்றை கொட்டகலை எரிபொருள் டிபோவில் நிறுத்துவதற்கு முற்பட்ட சந்தரப்பத்திலேயே இவ்வாறு தடம் புரண்டிருந்தமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More