Home இலங்கை நீண்ட தூரம் பின் தொடர்ந்து கஞ்சா கடத்தல்கார்கள் மடக்கிப்பிடிப்பு

நீண்ட தூரம் பின் தொடர்ந்து கஞ்சா கடத்தல்கார்கள் மடக்கிப்பிடிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கஞ்சா கடத்தல்கார்களை நீண்ட தூரம் பின் தொடர்ந்து சென்று மடக்கி பிடித்து அவர்களிடமிருந்து 77 கிலோ கேரளா கஞ்சாவினை யாழ். காவல்துறை விசேட புலனாய்வு துறை உத்தியோகஸ்தர்கள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து , கடத்தல்கார்கள் இருவரை யாழ் நகர் பகுதியில் இருந்து தென்மராட்சி பகுதி வரையில் பின் தொடர்ந்து , தென்மராட்சி எல்லை பகுதியில் வைத்து மடக்கி பிடித்துள்ளனர்.

அதன் போது அவர்களிடம் இருந்து 77 கிலோ 340 கிராம் கஞ்சா போதை பொருளை மீட்டதுடன் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் கஞ்சா போதை பொருளையும் சாவகச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் அவர்கள் ; மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் வடமராட்சி மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 27 மற்றும் 32 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More