Home இந்தியா நிலக்கரி இறங்குதளத்தில் பாலம் – மீனவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டம்…

நிலக்கரி இறங்குதளத்தில் பாலம் – மீனவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டம்…

by admin

திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழி கடற்கரையில் நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கடல் வழியாக கப்பலில் கொண்டு வந்து இறக்க வசதியாக திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழி கடற்கரையில் நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைப்பதால் ஆலந்தலை பகுதிக்குள் கடல்நீர் புகுந்து விடும் என்பதால் அந்த திட்டத்தை கைவிடவேண்டும் என வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போதும் அந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கல்லா மொழி கடற்கரையில் நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைக்ககூடாது என்றும், ஆலந்தலை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மீனவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கடற்கரையில் மனிதசங்கிலி போன்று வரிசையாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது அவர்கள் அனைவரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்பதுடன் தங்களது படகுகளுக்கு கறுப்புக் கொடி கட்டி கடற்கரையில் நிறுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More