Home இலங்கை நான்கு பேர் தேடப்படுகின்றனர்

நான்கு பேர் தேடப்படுகின்றனர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட வரணியில் திருட்டுக் குற்றச்சாட்டில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட குடும்பத்தலைவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் தேடப்படுகின்றனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன், தாக்குதலுக்குள்ளாகிய நபர் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் சிகிச்சை நிறைவடைந்ததும் அவருக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வரணி இயற்றாளையிலுள்ள வீடொன்றில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் சுமார் 10 பவுண் தங்க நகைகளையும் 57 ரூபா பணத்தையும் கொள்ளையிட்ட கொள்ளையர்களில் இருவர், மதுபோதையில் தடுமாறியதால் அகப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் தப்பிச்சென்றவர் என்ற குற்றச்சாட்டில் பொது மக்களால் கடந்த சனிக்கிழமை குடும்பத்தலைவர் ஒருவர் வீடொன்றில் வைத்து பிடிபட்டார்.

அவருக்கு கொள்ளைச் சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்ட இருவருக்கும் தொடர்புள்ளது என்று குறிப்பிட்டே மக்களால் பிடிக்கப்பட்டார்.

அந்த நபர் பொது மக்களால் தாக்குதல் நடத்தப்பட்ட. பின்னர் அவரை கொடிகாமம் காவல்துஐறயினர் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அந்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். வைத்தியசாலையில் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த நபரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் பெறப்பட்ட போது அதில் தன்னை வீட்டிலிருந்து கடத்திச் சென்று தாக்கியவர்கள் என நான்கு பேரின் பெயர்களை அவர் வழங்கினார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஏனையவர்களின் பெயர்களைத் தெரியாது எனவும் அவர்களை அடையாளம் காட்டமுடியும் என்றும் அந்த நபர் வாக்குமூலத்தில் தெரிவித்தார் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

‘அந்த நபரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். அவரை பிணையில் விடுத்த நீதிமன்று சட்டத்தை தம் கையில் எடுத்த செயற்பட்ட ஏனையவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்த்து.

அதனடிப்படையில் தாக்குதலுக்குள்ளான நபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் நான்கு பேர் தேடப்படுகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டால் ஏனையோர் தொடர்பிலும் விவரம் கிடைக்கும்’ என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More