Home உலகம் உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம் :

உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம் :

by admin

உலகின் மிகப்பெரிய சூப்பர்ஜம்போ ஏ380 விமானங்கள் தயாரிப்பதை 2021-ம் ஆண்டுடன் நிறுத்த உள்ளதாக ஐரோப்பாவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான எயர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

500 பயணிகள் அமரும் வண்ணம், 2 அடுக்குகளை கொண்ட சூப்பர்ஜம்போ ஏ380 விமானங்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், சூப்பர்ஜம்போ ஏ380 விமானங்கள் தயாரிப்பதை 2021-ம் ஆண்டு முதல் நிறுத்த உள்ளதாக ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூப்பர்ஜம்போ ஏ380 விமானங்களை தயாரிக்க செலவு அதிகம் என்பதாலும், கடந்த சில ஆண்டுகளில் அதன் கொள்முதல் மிகவும் குறைந்துவிட்டமை காரணமாகவும் அதனை தயாரிப்பதனை நிறுத்துவதற்கு எயர்பஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More