Home இந்தியா ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை…

by admin


ஸ்டெர்லைட் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டதனையடுத்து ஆலை மூடப்பட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை தேசிய பசுமை தீர்ப்பாயம்திறக்க அனுமதி அளித்தது.  இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றில் மேல்முறையீடு செய்த அதேவேளை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை அமுல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு மற்றும் அரசின் மேல்முறையீடு மனு ஆகியவற்றை சேர்த்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.  இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நீதிபதிகள் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததுடன் n ஆலையை திறப்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More