Home இலங்கை சுருட்டுக்கு தீமூட்டிய தீக்குச்சி சாரத்தில் வீழ்ந்து தீப்பற்றியதில் முதியவர் உயிரிழப்பு

சுருட்டுக்கு தீமூட்டிய தீக்குச்சி சாரத்தில் வீழ்ந்து தீப்பற்றியதில் முதியவர் உயிரிழப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


சுருட்டுக்கு மூட்டிய தீக்குச்சி சாரத்தில் வீழ்ந்து தீப்பற்றியதில் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உறவினர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதியவர் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கல்லூரி வீதி பருத்தித்துறையைச் சேர்ந்த வைரவப்பிள்ளை சிதம்பரபிள்ளை என்னும் 85 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 9ஆம் திகதி தனது வீட்டில் சுருட்டு மூட்டிய போது தீக்குச்சி தவறுதலாக அவர் அணிந்திருந்த சாரத்தில் வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் முதியவரது உடலில் பரவலாக தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாண போதான மருத்துவமனை திடீர் இறப்பு விசா­ணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More