Home உலகம் எகிப்தில் மரண தண்டனையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்

எகிப்தில் மரண தண்டனையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்

by admin

எகிப்தில் தொடர்ந்து நிறைவேற்றப்படும் மரண தண்டனையை நிறுத்துமாறு கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையகம் வலியுறுத்தியுள்ளது.

எகிப்தில் கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்ற நிலையில் இந்த மாதம் மட்டும் இதுவரை 15 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர்களிடம் சித்திரவதை மேற்கொண்டு வலுக்கட்டாயமாக ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் வழக்கு விசாரணையை நேர்மையாக நடத்தாமல் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையக்கு முறைப்பாடு செய்ததனையடுத்து எகிப்து அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையகம் மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்குமாறு வலியுறுத்தி உள்ளது.

மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதே ஐ.நா.வின் பொதுவான நிலை. எனினும் சர்வதேச சட்டங்களின்படி மரண தண்டனை அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை இல்லை, சித்ரவதை, வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெறுதல் போன்ற பிரச்சினைகள் உள்ளன என இது குறித்து மனித உரிமை ஆணையக செய்தி தொடர்பாளர் ருபெர்ட் கால்வில்லே தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More