Home உலகம் குற்றச்செயலில் ஈடுபட்டு, 1  வருட  சிறை தண்டனை பெற்ற வெளிநாட்டவர்கள் நாடுகடத்தப்படுவர்….

குற்றச்செயலில் ஈடுபட்டு, 1  வருட  சிறை தண்டனை பெற்ற வெளிநாட்டவர்கள் நாடுகடத்தப்படுவர்….

by admin

 

உள்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்டு, 1  வருடம்  அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு அந்நாடு   தடை விதித்துள்ளது.

உள்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை அவுஸ்திரேலியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது எனவும்  அவர்கள் அவுஸ்திரேலியாவில் வரவேற்கப்படமாட்டார்கள் எனவும் அந்நாட்டு  குடியுரிமை அமைச்சர்  டேவிட் கோல்மன் தெரிவித்துள்ளார்.

மேலும்  விசா நடைமுறைகளை கடுமையாக்கும் இந்த புதிய சட்டம் உடனடியாக கடந்த வாரம் அமுலுக்கு வந்துள்ளது எனவும்  இதன் மூலம், உள்நாட்டில் சிறை தண்டனை பெற்று, ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More