Home இலங்கை யாழில் வீடுகளுக்கு முன்பாக உள்ள கண்காணிப்பு கமராக்களை அகற்றுமாறு எச்சரிக்கை

யாழில் வீடுகளுக்கு முன்பாக உள்ள கண்காணிப்பு கமராக்களை அகற்றுமாறு எச்சரிக்கை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழில். வீடுகளுக்கு முன்பாக உள்ள கண்காணிப்பு ( CCTV) கமராக்களை அகற்றுமாறு ஆவா பிளஸ் குழுவின் பெயரில் வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. குறித்த கடிதத்தில் , தங்கள் வீடுகளுக்கு முன்பாக உள்ள கமராக்களை தாமதிக்காமல் உடனே கழட்டவும் , அல்லது வீதியை பார்க்காது உள்ளே பூட்டவும் , நம்ம தோழர்கள் சிலர் மாட்டி இருக்கிறாங்க ஆகவே உடனடியாக மாத்தவும் , இந்த எச்சரிக்கையை மீறினால் , உங்கள் மீதும் தாக்குதல் விரைவாக நடத்தப்படும்.என குறிப்பிடப்பட்டு உள்ளது.

யாழில் நடைபெறும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பான குற்றவாளிகளை காவல்துறையினர் சிசிரிவி கமரா ஆதாரங்களை கொண்டு கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More