
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் பயணித்த கார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் அல்ஹிலால் வீதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் அவரது காரை பின்தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இன்று (10) இரவு இடம்பெற்ற குறித்த தாக்குதலில் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.எனினும் அவர் பயணம் செய்த கார் சேதமடைந்துள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது அக்கட்சியில் இளைஞர்களை இணைக்கும் முக்கிய வேலைத்திட்டத்தில் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அம்பாறை மாவட்டத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்

Spread the love
Add Comment