Home இலங்கை சண்டிலிப்பாயில் வீட்டின் மீது தாக்குதல் – ஒருவர் கைது

சண்டிலிப்பாயில் வீட்டின் மீது தாக்குதல் – ஒருவர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் கோடரிகளுடன் வந்த இனம் தெரியாத கும்பல் ஒன்று வீட்டின் யன்னல் கண்ணாடிகளை உடைத்து , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து நொருக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று இரவு 11 மணியளவில் முகங்களை துணிகளால் மூடி கட்டியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல், வாள்கள் , கை கோடாரிகளுடன் வீட்டினுள் புகுந்து வீட்டின் யன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது. பின்னர் வீட்டு வளவினுள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து நொருக்கியுள்ளது

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் மானிப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் அங்கு சென்ற போது , தாக்குதலாளிகள் வீட்டில் இருந்து தப்பி செல்ல முற்பட்டுள்ளனர்.

அவர்களை காவல்துறையினர்; துரத்தி சென்ற போது , சங்குவேலி பகுதியில் தமது இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் வாள் ஒன்றினையும் கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் 17 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரை காவல்நிலையத்தில் நிலையத்தில் தொடர்ந்து தடுத்து வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More