Home உலகம் சிரியாவில் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் சரண்

சிரியாவில் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் சரண்

by admin

சிரியாவில் ஐ.எஸ். தீவிரரவாதிகள் 3 ஆயிரம் பேர் ராணுவத்திடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் அரசபடைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வரும் அதே வேளையில், ஐ.எஸ். தீவிரவாதிகளும் அங்கு ஆதிக்கம் செலுத்த தொடங்கியதனையடுத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் அவர்களுக்கெதிராக தாக்குதல்களை மேற்கொண்டு அவர்கள் வசமிருந்த அனைத்து நகரங்களையும் மீட்டிருந்தன.

எனினும் பாகுஸ் கிராமம் மட்டும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அதனை மீட்க அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து, சிரிய ராணுவம் அங்கு தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில் பலமிழந்துள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் ராணுவத்திடம் சரணடைந்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 3 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More