Home பிரதான செய்திகள் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கம்

ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கம்

by admin


2013ஆம் ஆண்டு நடைபெற்ற 6ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலியா, அங்கீத் சவான் ஆகியோர் மீ குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இது சம்பந்தமாக விசாரித்து வந்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டிருந்த நிலையில் அதனை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவைடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஸ்ரீசாந்த் போட்டிகளில் விளையாடுவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளதுடன் ஸ்ரீசாந்த் போட்டிகளில் விளையாடுவது குறித்து அளித்துள்ள மனுவிற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More