Home உலகம் பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீது, 3-வது முறையாக வாக்கெடுப்பு நடத்த அனுமதி கிடையாது…

பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீது, 3-வது முறையாக வாக்கெடுப்பு நடத்த அனுமதி கிடையாது…

by admin

பிரித்தானிய பாராளுமன்றில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீது 3-வது முறையாக வாக்கெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் ஜோன் பெர்கோவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  பிரெக்ஸிற்றுக்கான காலக்கெடு எதிர்வரும் 29-ந் திகதி முடிவடையவுள்ளநிலையில் பிரெக்ஸிற்றுக்காக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானிய பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தினை வாக்கெடுப்புக்கு விட்ட போது பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பிர்கள் அதனை நிராகரித்துள்ளனர்.  அத்துடன் புதிய ஒப்பந்தத்தினை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும் ஐரோப்பிய ஒன்றியம் மறுத்து விட்டது.

அதேவேளை பிரெக்ஸிற் நடவடிக்கையை தாமதப்படுத்தும் தீர்மானம் பாராளுமன்றில்  நிறைவேறியுள்ளது எனினும் சிறப்பான ஒரு ஒப்பந்தத்துடன பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும்  என நம்பிக்கை தெரிவித்துள்ள தெரசா மே, ஒப்பந்தம் மீது மீண்டும் வாக்கெடுப்பு நடத்த ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 3-வது முறையாக வாக்கெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் வராத நிலையில் ஏற்கனவே 2 முறை பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட ஒப்பந்தத்துக்கு வாக்களிக்குமாறு அவர்களை கேட்க முடியாதென அவர் தெரிவித்துள்ளர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More