Home இலங்கை இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்

இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்

by admin

எப்போதும் பெரும்பான்மைக் கருத்தை நடைமுறைப்படுத்தச் சென்றால் அது ஜனாநாயகத்தின் இறுதியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.  இலகுவாக ஆட்சி செய்வதற்கு ஆட்சியாளர்கள் குல பேதம், மத பேதம், இன பேதம் என்று பிரித்து மக்களின் எண்ணங்களில் நுழைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றால் பெரும்பான்மையினரின் எண்ணத்தினை நிறைவேற்ற வேண்டும் என பலர் எண்ணினாலும், சிறுபான்மைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பெரும்பான்மையினரின் கருத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

1 comment

Siva March 22, 2019 - 10:45 am

சிங்களம் என்ற பெரும்பான்மைச் சோற்றில், தேர்தல் ஆணையாளர் என்ற ஒரு சோறு பதமாகி என்ன புண்ணியம்?

குல பேதம் பேசி, மொட்டந் தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போடும் ஒருவர் நாட்டுத் தலைவரானமை நாம் செய்த பாவமன்றி வேறென்ன?

இனவாதம் மற்றும் போர் வெற்றி குறித்துப் பேசாது, தாம் மக்களின் உயர்வுக்காகச் செய்த செயல்களைச் சொல்லி வாக்கு வேட்டையாடும் ஒரு தலைவர் நமது ஸ்ரீலங்காவில், அன்றும் இல்லை, இன்றும் இல்லை, இனிமேலும்
இருக்கப் போவதுமில்லை.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More