Home உலகம் ஈராக்கில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்து – 94 பேர் பலி

ஈராக்கில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்து – 94 பேர் பலி

by admin

 
ஈராக்கில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 94 பேர் உயிரிழந்துள்ளதுடன் 55 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஈராக்கிலுள்ள குர்திஷ் இன மக்களின் புத்தாண்டு தினம் என்பதனால் புத்தாண்டை கொண்டாடுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரு படகில் மொசூல் நகர் அருகே உள்ள டைகரிஸ் ஆற்றை கடந்து சென்ற போது படகு கவிழந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

படகில் அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததாலேயே படகு கவிழ்ந்து மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில்  பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More