Home இலங்கை பெற்றோல் குண்டுடன் இருவர் கைது

பெற்றோல் குண்டுடன் இருவர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பெற்றோல் குண்டுடன் இருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். வரணி இயற்றாலை பகுதியில் இரு இளைஞர்கள் பெற்றோல் குண்டுடன் நிற்பதாகவும் அவர்கள் பெற்றோல் குண்டு தாக்குலை மேற்கொள்ள காத்திருப்பதாகவும் கொடிகாம காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து இரண்டு பெற்றோல் குண்டுகளையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய காவல்துறையினர் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பெற்றோல் குண்டுகளையும் மன்றில் பாரப்படுத்தினார்கள். அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரனையை அடுத்து இருவரையும் தலா ஒரு இலட்ச ரூபாய் ஆள் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More