Home இலங்கை மாகந்துர மதூஸ்டன் டுபாயில் கைதான மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டனர்..

மாகந்துர மதூஸ்டன் டுபாயில் கைதான மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டனர்..

by admin


பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஸ்டன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.  மொஹமட் நையீம், மொஹமட் முபா ஆகிய இருவருமே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் காவல்துறைப் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இணைந்து இருவரிடமும் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More