Home உலகம் ஜப்பானில் போர் விமானம் கடலில் விழுந்து விபத்து

ஜப்பானில் போர் விமானம் கடலில் விழுந்து விபத்து

by admin


ஜப்பானில் எப்-35 போர் விமானம் பசிபிக் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஜப்பானின் ஹோன்சு மாகாணத்தில் உள்ள மிசாவா நகரில் விமானப்படை தளத்திலிருந்து நேற்று முன்தினம் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தில் விமானி மாத்திரமே காணப்பட்ட நிலையில் விமானம் புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்துக்கு பிறகு கட்டுப்பாட்டு அறையுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டதனை தொடர்ந்து விமானத்தை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் குறித்தபோர் விமானம் பசிபிக் கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது தெரியவந்த நிலையில் நேற்று அந்த விமானத்தின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  அதே வேளை ; விமானத்தில் சென்ற விமானிக்கு என்ன நடந்தது எனத் தெரிய வராத நிலையில் அவரை தேடும் பணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த விமானம் விமானப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டு ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை . விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More