Home இலங்கை குப்பிளானில் மின்னல் தாக்கி இரு பெண்கள் உட்பட மூவர் பலி

குப்பிளானில் மின்னல் தாக்கி இரு பெண்கள் உட்பட மூவர் பலி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.குப்பிளான் பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். குப்பிளான் தெற்கு மயிலங்காடு பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு கண்ணன் (வயது 48) அவரது சகோதரியான கந்தசாமி மைனாவதி (வயது 52) மற்றும் ரவிக்குமார் சுதா (வயது 38) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

யாழில்.இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் மழை பெய்தது. அதன் போது வீட்டு க்கு அருகில் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த மூவரும் மழையின் காரணமாக தென்னை மரம் ஒன்றின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள் ஒதுங்கி நின்றுள்ளார்கள். அதன் போது தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More