Home இலங்கை இரணைமடுக் குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் விடுவிப்பு

இரணைமடுக் குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் விடுவிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு தேசிய நீர் வால் உயிரின வளர்ப்பு அதிகாரசபையால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இரணைமடு குளத்தில் விடப்பட்டுள்ளன.

சென்ற மூன்று வருடங்கள் இரணைமடு குளத்தின் அபிவிருத்தி காரணமாக குளத்தின் நீர் முற்றாக அகற்றப்பட்டத்தினால் குளத்தை நம்பி வாழும் நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்ற ஆண்டு குளத்தின் அபிவிருத்திகள் நிறைவடைந்த பின்னர் பருவபேர்ச்சி மழையும் போதியளவு பெய்தமையினால் குளத்தின் நீர் போதியளவு கிடைத்தமையினால் நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தேசிய நீர் வால் உயிரின வளர்ப்பு அதிகாரசபையினரும் கிளிநொச்சி இராணுவத்தினரும் இணைந்து சுமார் ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை இரணைமடு குளத்தில் விட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி இராணுவ படைமுகாம்களின் கட்டளைத் தளபதி மேஜர்ஜெனரல் ரவிப்பிரிய தேசிய நீர் வால் உயிரின வளர்ப்பு அதிகாரசபையின் தலைவர் நுவான் பிரசாத் மதவன் ஆராச்சி ஆகியோருடன் மீன்பிடி தொழிலாளர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More