Home இலங்கை மன்னார் ஓலைத்தொடுவாயில் கிளைமோர் குண்டு மீட்பு

மன்னார் ஓலைத்தொடுவாயில் கிளைமோர் குண்டு மீட்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் வளன் நகர் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் பண்ணை வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கிளைமோர் குண்டு ஒன்றை மன்னார் காவல்துறையினர்; இன்று (22) திங்கட்கிழமை காலை மீட்டுள்ளனர்.

குறித்த பண்ணை உரிமையாளர் குறித்த பண்ணை யை துப்பரவு செய்து கொண்டிருந்த போது முருங்கை மரத்தின் கீழ் வெடி பொருள் புதைத்து வகை;கப்பட்டுள்ளமையினை அவதானித்த நிலையில்,உடனடியாக மன்னார் காவல்துறையினருக்குதகவல் வழங்கியுள்ளனர்.

-இதன் போது மன்னார் காவல்நிலைய பொறுப்பதிகாரி,மன்னார் காவல்துறையினர்;, விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று விசாரனைகளை மேற்கொண்டதோடு குறித்த வெடி பொருளையும் பார்iவியிட்டனர்.

இதன் போது கிளைமோர் குண்டு ஒன்றே பொதி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தமை தெரிய வருகின்றது.

குறித்த விடையம் தொடர்பாக மன்னார் காவல்துறையினர்விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு,கண்டு பிடிக்கப்பட்ட கிளைமோர் குண்டினை மீட்டு செயழிலக்கச் செய்யும் நடவடிக்கைகளில் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புச்சம்பவம் இடம் பெற்று வருகின்ற நிலையில்,ஓலைத்தொடுவாய் வளன் நகர் பகுதியில் குண்டு மீட்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More