Home இலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகள் மேற்கொள்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள்

தேவாலயங்களில் வாழிபாடுகள் மேற்கொள்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள்

by admin


பாதுகாப்புக்காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகள் மேற்கொள்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதனால் மீள் அறிவித்தல் வரும்; வரை தேவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை இலங்கையிலுள்ள அனைத்து தேவாலயங்களின் பங்குத்தந்தையர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இலங்கையில் தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதில் 310 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், 500 க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்ற நிலையில் பேராயர் கர்தினால் மெல்கம் ஆண்டகை இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More