Home இலங்கை யாழ். பள்ளிவாசல்களில் விபரங்கள் சேகரிப்பு

யாழ். பள்ளிவாசல்களில் விபரங்கள் சேகரிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ். மாநகரில் அமைந்துள்ள   காவல்துறையினர் விவரங்களை சேகரித்து வருவதாக அவற்றின் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

பள்ளிவாசல்களுக்கு வருகை தந்த காவல்துறையினர்  பள்ளிவாசலுக்கு வருகை தருவோர் தொடர்பான விவரங்களை வழங்குமாறு கோரியுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் முஸ்லீம் மக்களின் விபரங்களை நேற்றைய தினம் புதன்கிழமை காவல்துறை விசேட அதிரடி படையினர் சேகரித்து சென்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்ப்பாணம் முஸ்லிம் தலைவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவிருந்த நிலையில் காவல்துறையின் இந்த நடவடிக்கையால் அந்த சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

#jaffna #mosque police #informations #muslims

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More