Home இந்தியா வெடிகுண்டு மிரட்டல் – மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு அதிகரிப்பு

வெடிகுண்டு மிரட்டல் – மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு அதிகரிப்பு

by admin

தமிழகத்தின் முக்கிய இடங்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என தொலைபேசி மூலம் வந்த மிரட்டலையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தின் முக்கிய இடங்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என தொலைபேசி மூலம் வந்த மிரட்டலையடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

மதுரையில் புகையிரதநிலையம், விமான நிலையம், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்கனவே காவல்துறை பாதுகாப்பு உள்ள போதிலுவும் தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போது வெடிகுண்டு மிரட்டலையடுத்து வழக்கத்தைவிட கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அடிக்கடி கருவிகளுடன் உதவியுடன் கோவிலில் சோதனை நடத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினரை உச்சகட்ட விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#threat #maduraimeenakshitemple #security

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More