Home இலங்கை சின்னப்பாலமுனை கடற்கரையில்வெடிபொருட்கள், சயனைட் குப்பிகள்…

சின்னப்பாலமுனை கடற்கரையில்வெடிபொருட்கள், சயனைட் குப்பிகள்…

by admin

அம்பாறை மாவட்டம் பாலமுனை, சின்னப்பாலமுனை கடற்கரைப் பகுதியில் இன்று வெடிபொருட்கள் சிலவும் சயனைட் குப்பியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினருக்கு இரகசியத் தகவல் கிடைக்கப் பெற்றதனையடுத்து அப்பிரதேசத்திற்கு சென்ற கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் குறித்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

உள்ளுரில் தயாரிக்கப்பட்ட ஆறு வெடிகுண்டுகள், துப்பாக்கி ரவைகள் சிலவும், சயனைட் குப்பியும் ஒரு பையினுள் இடப்பட்ட நிலையில் கடற்கரையோரம் வீசப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வெடிபொருட்கள் நேற்றுக் காலை குறித்த பகுதியில் இவ்வெடிபொருட்கள் வீசப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. #AmparaDistrict #srilanka #explosive #eastersundayattacksri lanka

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More