Home இலங்கை ஐ.எஸ் உறுப்பினரின் ஹற்றன் வீட்டில் கத்திகள் மீட்பு….

ஐ.எஸ் உறுப்பினரின் ஹற்றன் வீட்டில் கத்திகள் மீட்பு….

by admin

ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினரொருவரின் ஹற்றனில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து ஒன்பது கத்திகள் காவல்துறையினரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் வீட்டில் இருந்த குறித்த நபரின் சகோதரர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வீட்டில் இருந்த ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அவர் தற்போது யேமனில் வசித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சந்தேகநபரின் அட்டன் – மல்லியப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டை ஹற்ற ன் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.எம்.ஜெமில் தலைமையில் காவல்துறைக் குழுவினர் சோதனையிட்டுள்ளனர். அதன்படி, வீட்டின் களஞ்சிய அறையில் இருந்து இந்த கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சகோதரர் ஹற்றன் மாவட்ட நீதவான் ஜொக்சி முன்னிலையில் முற்படத்தப்பட்ட பின்னர் 20 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  மேலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஹற்றன் காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு சந்தேக நபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரனமாக ஹற்றன் டிக்கோயா பகுதியில் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து பாரிய சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர். பொகவந்தலாவ ஹற்றன், ஹற்றன் பொகவந்தலாவ, மஸ்கெலியா சாமிமலை, சாஞ்சிமலை சலகந்த ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் முச்சக்கரவண்டி, வான், லொறி போன்ற வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்துவதோடு, பயணிகளின் அடையாள அட்டடை பைகள் எனபவற்றை சோதனைக்கு உட்படுத்திபட்டமை குறிப்பிடதக்கது


(க.கிஷாந்தன்)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More