Home இலங்கை யட்டியாந்தோட்டையில் வெடிப்பொருட்களை இனங்காணும் உபகரணம் மீட்பு

யட்டியாந்தோட்டையில் வெடிப்பொருட்களை இனங்காணும் உபகரணம் மீட்பு

by admin


யட்டியாந்தோட்டை கலாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து வெடிப்பொருட்களை இனங்காணும் உபகரணமொன்று காவல்துறையினரினால் ; கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் மற்றும் அவரின் சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வீட்டு உரிமையாளர், மின்சாதனங்களை பழுது பார்ப்பவர் என தெரியவந்துள்ளது.

பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டில் இருந்த குறித்த உபகரணத்தை மறைக்க முற்படும் போது காவல்துறையினரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்றையதினம் ருவான்வெல்ல நீதவானிடம் முற்படுத்தப்படவுள்ள நிலையில் யட்டியாந்தோட்டை காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)

 

#explosive #kalakoda #checking

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More