Home இலங்கை யாழ்.நகர் – திருநெல்வேலிப் பகுதிகளில் வாள்களுடன் திரிந்து அட்டகாசம் புரிந்தவர் கைது…

யாழ்.நகர் – திருநெல்வேலிப் பகுதிகளில் வாள்களுடன் திரிந்து அட்டகாசம் புரிந்தவர் கைது…

by admin


யாழ்.நகர் பகுதி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் வாள்களுடன் சென்று வர்த்தக நிலையங்களில் கொள்ளையில் ஈடுபட் காவற்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் தேடப்படுகின்றனர்.

யாழ். நகரில் மணத்தறை லேன், நாவலர் வீதி உள்பட பல இடங்களில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை இரவு வேளையில் மூவர் கொண்ட கும்பல் ஒன்று வாள்களுடன் நடமாடியது. வீதியில் சென்றவர்களை வாளால் மிரட்டியும் வெட்டியும் அடாவடியில் ஈடுபட்ட கும்பல், கடைகளுக்குச் சென்று வாளைக் காண்பித்து கொள்ளையிலும் ஈடுபட்டது.

சம்பவங்கள் தொடர்பில் சிசிரிவி கமராக்களின் பதிவுகளை வைத்து யாழ்ப்பாணம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக காவற்துறையினர் கூறினர்.

கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் சந்தேகதபரிடமிருந்து கைப்பற்றப்பட்டது என்று தெரிவித்த பொலிஸார், மேலும் இருவர் தேடப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டனர். #jaffna #srilanka #arrested

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More