Home இலங்கை நிறுத்தாமல் சென்ற கார்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி -ஒருவர் காயம்

நிறுத்தாமல் சென்ற கார்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி -ஒருவர் காயம்

by admin

வத்தளை, ஹூனுபிட்டிய பிரதேசத்தில் நிறுத்தாமல் சென்ற இரண்டு கார்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை ஹூனுபிட்டிய கடற்படையினரின் சோதனைச் சாவடியில் வாகனம் ஒன்றை சோதனை செய்ய முற்பட்ட போது, குறித்த வாகனம் கடமையில் இருந்த கடற்படை வீரர் ஒருவரை மோதி விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த போதே அந்த வாகனம் மீது துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் எனவும் குறிழத்த சம்பவம் நடைபெற்று ஒரு மணித்தியாலத்தின் பின், மற்றொரு காரும் இவ்வாறு நிறுத்தாமல் செல்ல முற்பட்ட போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அந்தக்காரின் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சாரதிகளும் அதிக மது போதையில் இருந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ள வத்தளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

#wattala #shooting #navy #dead

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More