Home இலங்கை 74 கிலோ கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இருவர் கைது

74 கிலோ கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இருவர் கைது

by admin


யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் வைத்து 74 கிலோ கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தனர் என்னும் குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வடமராட்சி கட்டைக்காடு பகுதியை சேர்ந்த 28 மற்றும் 35 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கடற்படையினர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதனை தொடர்ந்து அவர்கள் மாவட்ட போதைப் பொருள் குற்ற தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

#ganja #arrest #vadamarachi

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More