Home இலங்கை சிலாபம் – குளியாப்பிட்டியவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது

சிலாபம் – குளியாப்பிட்டியவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது

by admin


சிலாபம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில் சிலாபம் காவல்துறைப் பிரிவில் நேற்று நண்பகல் முதல் உடனுக்கு அமுலாகும் வரையில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 4 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன்; இன்று அதிகாலை குளியாப்பிட்டிய, பிங்கிரிய, துமலசூரிய ஆகிய பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது எனவும் காவல்துறை ஊடகம் தெரிவித்துள்ளது.

சிலாபம், குளியாப்பிட்டிய, பிங்கிரிய மற்றும் துமலசூரிய ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#Chilaw #Kuliyapitiya #curfew

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More