Home இலங்கை மன்னாரில் மீன்பிடி உபகரணங்கள் விற்பனைநிலையம் திறந்து வைப்பு :

மன்னாரில் மீன்பிடி உபகரணங்கள் விற்பனைநிலையம் திறந்து வைப்பு :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் மன்னார் பிரதேச மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாச மீன் பிடி உபகரணங்கள் விற்பனை நிலையம் இன்று (16) காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

குறித்த மீன் பிடி உபகரணங்கள் விற்பனை நிலையத்தினை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இதன் போது மன்னார் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திருமதி சி.எஸ்.அமிர்தநாதன் , ஓய்வு பெற்ற மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஏ.செபமாலை ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் மீன் பிடி உபகரணங்கள் மீனவ சங்கங்களுக்கு வழங்கியும் வைக்கப்பட்டது.

-மேலும் நீண்டகாலமாக கடமையாற்றி ஓய்வு பெற்ற மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஏ.செபமாலை மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

குறித்த நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்,மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்கங்களின் சமாச பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

#மன்னார் #மீன்பிடிஉபகரணங்கள்  #விற்பனைநிலையம்  #mannar

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More