Home இலங்கை பயங்கரவாத தாக்குதல் குறித்து எழுத்து மூலம் தகவல் அனுப்ப கோரிக்கை :

பயங்கரவாத தாக்குதல் குறித்து எழுத்து மூலம் தகவல் அனுப்ப கோரிக்கை :

by admin


இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 அன்று பயங்கரவாதிகளினால் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தகவல்களை எழுத்துமூலம் அனுப்புமாறு கோரும் பத்திரிகை அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பற்றி எவருக்கும் தமது கருத்து மற்றும் யோசனைகளை எழுத்து மூலம் அனுப்புவதற்கான அறிவித்தல் பத்திரிகைகள் மூலம் விரைவில் வெளியிடப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

14 நாட்களுக்குள் இவ்வாறான தகவல்களை அனுப்ப முடியும். இது தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம்  மேலும் குறிப்பிட்டுள்ளது.

#பயங்கரவாத தாக்குதல்  #உயிர்த்த ஞாயிறு #eastersundaylk

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More