Home உலகம் மலேரியாவை பரப்பும் நுளம்புகளை அழிக்கும் முறை மேம்படுத்தப்பட்டுள்ளது

மலேரியாவை பரப்பும் நுளம்புகளை அழிக்கும் முறை மேம்படுத்தப்பட்டுள்ளது

by admin


மலேரியாவை பரப்பும் நுளம்புகளை அழிக்கும் முறையை மேம்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிலந்திக்கே உரித்தான ஒருவித நஞ்சை மரபணு மாற்றம் செய்து பூஞ்சையை வெளியிட வைத்து அவ்வாறு நுளம்புகளை அழிக்கும் முறையை மேம்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பசோவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அங்கிருந்த மலேரியா நுளம்புகளின் எண்ணிக்கை 45 நாட்களில் 99 சதவீதம் அழிந்துவிட்டது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

அதேவேளை நுளம்புகளின் இனத்தையே அழிப்பது தங்களது நோக்கமில்லை என்றும், மலேரியாவின் பரவலை தடுப்பதே தமது நோக்கம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நுளம்புகளினால் பரவும் மலேரியாவினால் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 4,00,000 பேர் உயிரிழப்பதுடன் 219 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

#மலேரியா  #நுளம்பு #malaria  #mosquito

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More