Home இந்தியா ஜம்மு-காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

by admin


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி தப்பிச் செல்ல முயன்ற இரு தீவிரவாதிகள்; இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை சோபியான் மாவட்டத்துக்குட்பட்ட மூலு சித்ராகம் கிராமம் அருகே ராணுவத்தினர் வீதியில் தடுப்பு வேலி போட்டு வாகனப் போக்குவரத்தை கண்காணித்துக் கொண்டிருந்த வேளை அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது அதில் இருந்தவர்கள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டதாகவும் அதற்கு ராணுவத்தினர் நடத்திய எதிர்தாக்குதலில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது

#ஜம்மு-காஷ்மீரில் #தீவிரவாதிகள் #சுட்டுக்கொலை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More