Home இலங்கை பேசாலை கடற்பகுதியில் 140 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு

பேசாலை கடற்பகுதியில் 140 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு

by admin


மன்னார் – பேசாலை கடற்பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் 140 கிலோ 760 கிராம் நிறை கொண்ட கேரளக் கஞ்சாப் பொதிகளை கடற்படையினர் நேற்று வியாழக்கிழமை (6) கைப்பற்றியுள்ளனர். கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த டோலர் படகொன்றிலிருந்து குறித்த கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

பேசாலை கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே குறித்த டோலர் படகில் இருந்து கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும், குறித்த படகிலிருந்த சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரளக்கஞ்சாவையும் டோலர் படகையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#பேசாலை #கடற்பகுதி #கேரளக் கஞ்சா  #மீட்பு #கடற்படையினர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More