Home உலகம் உக்ரைனில் மனநல மருத்துவமனையில் தீவிபத்து – 6 பேர் பலி

உக்ரைனில் மனநல மருத்துவமனையில் தீவிபத்து – 6 பேர் பலி

by admin


வடமேற்கு உக்ரைனில் அரச மனநல மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். 2-ம் உலகப்போர் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்று உளரீதியாக பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற குறித்த மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை மாலை இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுமுள்ளது.
தீயானது மேற்கூரை வழியாக பிற தளங்களுக்கும் பரவியநிலையில் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.

எனினும்; தீயில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை என்பதுடன் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

#Ukraine #psychiatric hospital #உக்ரைன்#மனநல மருத்துவமனை #தீவிபத்து #ஆப்கானிஸ்தான்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More