Home இலங்கை வடக்கு கிழக்கில் இந்து – பௌத்த மக்கள் பிரச்சினையை ஆராய்வதற்கே வந்தோம் 

வடக்கு கிழக்கில் இந்து – பௌத்த மக்கள் பிரச்சினையை ஆராய்வதற்கே வந்தோம் 

by admin


வடக்கு கிழக்கில் நிலவும் இந்து – பௌத்தமக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கே தாம் விஜயம் மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.    வவுனியாவில் இந்து மத குருமார்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கும், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பௌத்த, இந்து மக்கள் சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.  அரசியல் பிரச்சினைகளை ஒரு புறம் வைத்து முதலில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற யுத்தத்தை மனதில் கொண்டு பௌத்த, இந்து மக்கள் பிரிவினையுடன் செயற்படக் கூடாது என்றும் வடக்கு மற்றும் கிழக்கில் சில இடங்களில் இவ்விரு மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இடையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே தாம் வவுனியாவிற்கு பயணம்செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.தற்போது நாட்டில் இந்து, பௌத்த மக்கள் மத்தியிலும் சில பிரதேசங்களில் ஒற்றுமையின்மை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் இந்து – பௌத்த மக்களின் ஒற்றுமை நாட்டுக்கு அவசியமாகியுள்ளது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

#வடக்கு கிழக்கில் #இந்து #பௌத்த மக்கள்  #வவுனியா #அத்துரலிய
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More