Home இலங்கை அமைச்சுக்களை துறந்த, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் மீண்டும் பதவியேற்பர்?

அமைச்சுக்களை துறந்த, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் மீண்டும் பதவியேற்பர்?

by admin


அமைச்சுப் பதவிகளைத் துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர், மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளைப் பொறுப்பேற்கத் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், கபீர் ஹஸீமும் அப்துல் ஹலீமும், தாங்கள் ஏற்கெனவே வகித்த அமைச்சுப் பொறுப்புகளை மீண்டும் பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்விருவரைத் தவிர்ந்த ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன் ஆகியோரும் முன்னர் இராஜாங்க அமைச்சுகளைப் பொறுப்பேற்றிருந்த நால்வரும் பிரதிய அமைச்சராகவிருந்த மற்றொருவருமான ஒன்பது பேர், ஏற்கனவே தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

எனினும், அவர்கள் அனைவரும், தாங்கள் வகித்த அமைச்சுகளைப் பொறுப்பேற்பார்களா என்பது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை என்கிற நிலையில், இந்த இருவரும், தற்போதைக்கு மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்கவிருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. #முஸ்லிம்பாராளுமன்றஉறுப்பினர்கள் #இராஜாங்கஅமைச்சர் #அமைச்சுப்பொறுப்புகள் #ரவூப் ஹக்கீம் #ரிஷாட்பதியூதீன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More