Home இலங்கை யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பொது வீதி அபகரிப்பு – நாளை போராட்டம்….

யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பொது வீதி அபகரிப்பு – நாளை போராட்டம்….

by admin


யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பொது வீதியினை தனியார் ஒருவர் அபகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , அவ்வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக விடுமாறும் கோரியும் நாளைய தினம் சனிக்கிழமை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்.நகரின் மத்தியில் அமைந்துள்ள கடை தொகுதிகளின் மத்தியில் குறித்த வீதி காணப்படுகின்றது. அதனை வீதிக்கு அருகில் உள்ள கடை உரிமையாளர் அபகரித்து அதனை தனது கடையுடன் இணைத்துள்ளமையால் அவ்வீதி ஊடாக போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது.

எனவே குறித்த வீதியினை பொது போக்குவரத்திற்கு திறந்து விட வேண்டும் என கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.  #யாழ்மாநகரசபைஎல்லை #கவனஈர்ப்புபோராட்டம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More